
அனைத்துப் படங்களையும் தள்ளி வைத்த சிரஞ்சீவி
இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்காமல் வேறு எந்தப் படத்திலும் நடிக்க சிரஞ்சீவி விரும்பவில்லையாம். அதனால், அவர் நடிக்க வேண்டிய அனைத்துப் படங்களையும் தள்ளி வைத்துவிட்டார் என்கிறார்கள்.
மலையாளத்தில் வெளிவந்த "லூசிபர்" படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பூஜையும் நடந்தது. சிரஞ்சீவி நடிக்கும் அப்படத்தை மோகன்ராஜா இயக்கவிருந்தார். அடுத்து தமிழில் அஜித் நடித்து வெளிவந்த "வேதாளம்" படத்தையும் ரீமேக் செய்ய இருந்தார். அவற்றோடு ஒரு நேரடி தெலுங்குப் படத்திலும் நடிக்க முடிவு செய்திருந்தார். இந்த மூன்று படங்களையும் தள்ளி வைத்துவிட்டாராம்.
தற்போதுள்ள நிலையில் "ஆச்சார்யா" படப்பிடிப்பை மீண்டும் நடத்தி அப்படத்தை வெளியிட ஆகஸ்ட் மாதம் ஆகலாம். அதற்குப் பிறகே நடிக்க வேண்டிய மற்ற மூன்று படங்களைப் பற்றி திட்டமிட உள்ளார்களாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!