
பிரித்விராஜ் இயக்கும் மம்முட்டி படம் : உறுதி செய்த கதாசிரியர்
அதேசமயம் பிரித்விராஜோ லூசிபர் படத்தின் வெற்றி காரணமாக மீண்டும் மோகன்லாலை வைத்து அதன் இரண்டாம் பாகமான "எம்புரான்" படத்தை அடுத்ததாக இயக்கவுள்ளார்.. அப்படியானால் மம்முட்டி படத்தை இயக்க போவதில்லையா என கேட்டால், “மம்முட்டியின் தேதிகள் கிடைத்தால் அவரை வைத்து படம் இயக்க தயார் என்று நான் கூறினேன்.. அவரும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார்.. ஆனால் இன்னும் அவருக்கான கதை என்னிடம் வந்து சேரவில்லை” என்று கூறிவந்தார்.
இந்தநிலையில் லூசிபர் மற்றும் அதன் இரண்டாம் பாகமான எம்புரான் ஆகிய படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியரும் நடிகருமான முரளிகோபி, சமீபத்திய பேட்டி ஒன்றில், “மம்முட்டி-பிரித்விராஜ் படத்திற்கான கதை தயாராகிவிட்டது. அவர்கள் கூட்டணி இணையப்போவதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என கூறியுள்ளார். தவிர வேறொரு இயக்குனரின் டைரக்சனில் மம்முட்டி நடிக்கும் படத்திற்கும் கதை எழுதியுள்ள இவர், பிரித்விராஜ் படத்திற்காக மம்முட்டிக்கு தான் எழுதிய கதையையும் சொல்லி அவரிடம் ஒகேவும் வாங்கிவிட்டாராம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!