
இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
இந்த நிலையில் ரஞ்சித் தரப்பில் ஆஜராக வழக்கறிஞர், இந்த வழக்கு இயக்குனர் ரஞ்சித்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக போடப்பட்ட பொய்யான வழக்கு. சம்பந்தப்பட்ட நடிகையின் காட்சிகளை படத்திலிருந்து வெட்டி நீக்கியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இவர் மீது புகார் அளித்துள்ளனர். இயக்குனர் ரஞ்சித்தை போலீசார் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். எதிர் தரப்பினர் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்வாதம் செய்தாலும் கூட இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி அவருக்கு வழக்கமான சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!