
ஆவேசம் பட இயக்குனரின் உதவியாளர் படத்தை துவங்கி வைத்த சூர்யா, நஸ்ரியா
ஏப் 07, 2026
Advertisement
மலையாளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் வெற்றியை பெற்றது. இதை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இதற்கு முன்னதாக அவர் ரோமாஞ்சம் என்கிற வெற்றி படத்தையும் கொடுத்திருந்தார். ஆவேசம் படத்தை தொடர்ந்து தற்போது சூர்யாவின் 47வது படத்தை இயக்கி வருகிறார் ஜித்து மாதவன். இதில் நஸ்ரியா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜித்து மாதவனிடம் ரோமஞ்சம் மற்றும் ஆவேசம் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷிபினா பாபின் பாக்கர் என்பவர் முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. இந்த துவக்க விழா பூஜையில் சூர்யா, நஸ்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் கிளாப்பை சூர்யா அடித்து படத்தை துவங்கி வைத்தார். கொடுங்கொல்லூர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
இந்த நிலையில் ஜித்து மாதவனிடம் ரோமஞ்சம் மற்றும் ஆவேசம் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷிபினா பாபின் பாக்கர் என்பவர் முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. இந்த துவக்க விழா பூஜையில் சூர்யா, நஸ்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் கிளாப்பை சூர்யா அடித்து படத்தை துவங்கி வைத்தார். கொடுங்கொல்லூர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!