
சிரஞ்சீவி படத்தின் ரேட்டிங்கிற்கு தடை : விஜய் தேவரகொண்டாவின் வருத்தமும், சந்தோஷமும்
இது குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா கூறும்போது, “இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியும் வருத்தமும் ஒருசேர தோன்றுகிறது. இப்படிப்பட்ட கடின உழைப்புக்கும் பணத்தைக் கொட்டி உருவாக்கப்பட்ட கனவுகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் விதமாக இந்த முயற்சியை மேற்கொண்டதற்காக ஒரு பக்கம் மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதேசமயம் நம் மக்களே இது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறார்களே வாழு வாழ விடு என்பது என்ன ஆனது ? நாம் எல்லாம் ஒன்றாக உயர வேண்டாமா ? என்கிற வருத்தமும் ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் டியர் காம்ரேட் படத்தின் போது தானும் இது போன்ற பிரச்னையை சந்தித்ததாகவும் அதே சமயம் பலர் நல்ல படம் என்றால் எப்படி இருந்தாலும் ஓடிவிடும் என்று சொன்னாலும் கூட தனது அடுத்தடுத்த படங்களுக்கும் இதுபோன்று எதிர்மறை விமர்சனங்கள் பரப்பப்பட்ட போது தான் இதன் வீரியத்தை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!