
நடிகர் சித்திக்கிற்கு அரபு நாடுகளுக்கு செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய நீதிமன்றம்
அதனை தொடர்ந்து நடிகர் சித்திக் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தான் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகி இருந்த படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் அதற்கு அனுமதி வழங்கும்படியும் தன்னுடைய பாஸ்போர்ட்டை தன்னிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் நடிகர் சித்திக்.
இதனை விசாரித்த நீதிமன்றம் வரும் செப்டம்பர் 19 முதல் 24 வரை அரபு நாடுகளுக்கு சென்று வரவும் அக்டோபர் 13 முதல் 18 வரை கத்தாருக்கு சென்று வரவும் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் ஒவ்வொரு முறை அவர் வெளிநாட்டுக்கு சென்று திரும்பியதும் தனது பாஸ்போர்ட்டை காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் விதித்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!