
படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம்
இந்த சர்ச்சை குறித்து இயக்குனர் மகேஷ் நாராயணன் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “எந்த உள்நோக்கத்திலும் இந்த படம் எடுக்கப்படவில்லை. ஒரு இளம்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில் மட்டும் தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை தவறாக கருதும் நீங்கள் அந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய விஷயமான எந்த ஒரு பெண்ணிற்கும் தங்கள் வீட்டை விட்டு நகரத்திற்கு சென்று திரும்பவும் வீட்டிற்கு வருவதற்குள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கான பப்ளிக் டாய்லெட்டுகள் இருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்பி இருந்தோம். அது பற்றி யாருமே பதில் கூறவில்லை. இப்படி மதத்தை நாங்கள் புண்படுத்தி இருப்பதாக உள்நோக்கம் கற்பிப்பவர்கள், தங்கள் வீட்டில் இருக்கும் பெண்களிடம் அவர்கள் இந்த பப்ளிக் டாய்லெட் இல்லாததால் வெளியே சென்று வரும்போது படும் அவஸ்தை பற்றி கேட்டு தயவு செய்து அதையும் பதிவிடுங்கள்” என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!