
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‛புலி முருகன் இயக்குனருடன் கைகோர்த்த பிரித்விராஜ்
இன்னொரு பக்கம் மலையாளத்தில் உருவாக இருக்கும் கலிபா என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பிரித்விராஜ். இந்த படத்தை புலி முருகன் இயக்குனர் வைசாக் இயக்குகிறார். கடந்த 2010ல் வெளியான போக்கிரி ராஜா என்கிற படத்தில் பிரித்விராஜை இயக்கியதன் மூலம் தான் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமானார் வைசாக். அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்குகிறார். படத்தின் துவக்க விழா பூஜை தற்போது நடைபெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் லண்டனில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!