
திடீர் மாரடைப்பு : மருத்துவமனையில் பிரபல கதாசிரியர் எம்டி வாசுதேவன் நாயர் அனுமதி
தனது 23 வயதிலேயே நாலு கேட்டு என்கிற நாவலை எழுதி அதற்காக கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றவர் எம்டி வாசுதேவன் நாயர். அதன் பிறகு 1965ல் முறப்பெண்ணு என்கிற படத்திற்கு கதை எழுதியதன் மூலமாக சினிமாவிலும் அடி எடுத்து வைத்தார். மம்முட்டி, மோகன்லால், பிரேம் நசீர் உள்ளிட்ட பலர் இவரது கதைகளை தழுவி உருவான படங்களில் நடித்து பிரபலமானார்கள். 1973 இல் நிர்மாலயம் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்த இவர் ஆறு படங்களை இயக்கியுள்ளார்
அதுமட்டுமல்ல 1989ல் மம்முட்டி நடிப்பில் வெளியான ஒரு வடக்கன் வீர கதா என்கிற படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார். குறிப்பாக வரலாற்று கதைகளை எழுதுவதில் இவர் வித்தகரும் கூட. அதற்கு பழசிராஜா திரைப்படத்தை இன்னொரு உதாரணமாக கூறலாம். சமீபத்தில் கூட இவரது எழுத்தில் உருவான 10 சிறுகதைகளை ஒரு ஆந்தாலஜி படமாக உருவாக்கி மனோரதங்கள் என்கிற பெயரில் வெளியிட்டனர். இதில் மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஒவ்வொரு கதையிலும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!