
நடிகர் சித்திக்கிற்கு இடைக்கால ஜாமினை நீட்டித்த உச்ச நீதிமன்றம்
கேரள உயர்நீதிமன்றம் சித்திக்கிற்கு ஜாமின் மறுத்து விட்ட நிலையில் தான் கைதாவதில் இருந்து தப்பிக்க சில நாட்கள் தலைமறைவான சித்திக், உச்ச நீதிமன்றத்தை நாடி இடைக்கால ஜாமின் பெற்றார். அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியதுடன் அதேசமயம் அவர் போலீசின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆனால் விசாரணையில் அவர் சரியான தகவல்களை தராமல் புறக்கணிப்பதாகவும் அலட்சியம் காட்டுவதாகவும் அதனால் அவரை கைது செய்து விசாரிக்க முடிவு எடுத்த போலீஸார் அவருக்கு வழங்கப்பட்ட இடைகால ஜாமினை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனால் தான் கைதாவதில் இருந்து தப்பிக்க மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடினார் சித்திக். அவரது வேண்டுகோளை ஏற்று தற்போது அவரது இடைக்கால ஜாமினை நவம்பர் 30 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இதனால் தற்போது கைதாவிலிருந்து தப்பித்துள்ளார் நடிகர் சித்திக்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!