
ஜிம் பயிற்சியாளரை தாக்கியதாக நடிகர் துருவ சார்ஜாவின் மேலாளர் கைது
இது குறித்து காவல்துறையில் வெளியிட்டுள்ள தகவலில் துருவ சார்ஜாவின் மேலாளர் அஸ்வின் என்பவர் ஜிம் பயிற்சியாளர் பிரசாந்த் பூஜாரியை, தனக்கு கீழ் பணி புரியும் இரண்டு நபர்களை விட்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார். மே 29ஆம் தேதி இந்த நிகழ்வு நடந்துள்ளது. இது குறித்து தற்போது பிரசாந்த் பூஜாரி கொடுத்துள்ள புகாரின் பேரில் அஸ்வின் மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் துருவ சார்ஜா உடன் ஜிம் பயிற்சியாளரான பிரசாந்த் பூஜாரி நெருக்கமான நட்பு காட்டுவதை விரும்பாததால் அஸ்வின் இப்படி தாக்குதலுக்கு ஏற்பாடு செய்து, அதில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக தனது உதவியாளர்களை ஏவி விட்டுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!