
நடிகையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகரை படத்திலிருந்தே நீக்கிய 2018 பட இயக்குனர்
இந்த அதிரடி நடவடிக்கை எடுத்தவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 2018 படத்தின் இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் தான். மலையாள திரையுலகில் பெண்கள் அதிக அளவில் வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்படுவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை கூறியிருந்தது.
இந்த நிலையில் இந்த அறிக்கையை வரவேற்று கருத்து கூறியுள்ள பிரபல மலையாள இயக்குனரும், நடிகருமான ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர், ‛‛நான் இயக்கிய 2018 படத்தில் இதே போன்ற ஒரு நடிகர் படத்தில் நடித்த ஒரு நடிகையிடம் அநாகரீகமாக நடந்து கொண்டபோது அவரை உடனடியாக படத்திலிருந்து தூக்கினேன். அவர் நடித்த காட்சிகளையும் நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து காட்சிகளை படமாக்கினேன். நீங்கள் இப்போது அந்த படத்தை பார்த்தீர்கள் என்றால் சம்பந்தப்பட்ட அந்த ஒரு கதாபாத்திரத்தின் கன்டினிட்டி மிஸ் ஆகி இருப்பதை கவனிக்க முடியும். அரசாங்கம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதில் பாரபட்சம் காட்டக்கூடாது” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!