
மீடூ புகாரில் சிக்கிய நடிகருக்கு மகளாக பார்வதி நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?
இந்த நிலையில் தான் சமீபத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படத்தில் நடிகை பார்வதி, குணச்சித்திர நடிகர் அலன்சியர் லே லோபஸ் என்பவருக்கு மகளாக நடித்திருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகர் அலன்சியர் லே தன்னுடன் நடித்த ஒரு அறிமுக நடிகையிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக மீடூ புகாரில் இடம் பிடித்தார். இதே பார்வதி உள்ளிட்ட சினிமா பெண்கள் நல அமைப்பு உறுப்பினர்களின் கண்டனத்திற்கும் ஆளானார்.
அதன்பிறகு தனது செயல்களுக்காக தன்னை மன்னித்து விடுமாறு பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் அலன்சியர் லே. அப்படி அவர் மன்னிப்பு கேட்டதற்கும் அவரது மன மாற்றத்திற்கும் பார்வதி உள்ளிட்ட பல நடிகைகளும் அந்த சமயத்தில் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தனர். அதனால்தான் தற்போது அலன்சியர் லேவுடன் இணைந்து நடிக்க பார்வதி ஒப்புக் கொண்டார் என்று தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!