
விஜய் பட இயக்குனரிடம் மகனை ஒப்படைத்த சுரேஷ்கோபி
இந்த நிலையில் சுரேஷ் கோபியின் இரண்டாவது மகன் மாதவ் சுரேஷ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் அறிமுகமாகும் கும்மாட்டி களி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வின்சென்ட் செல்வா. தமிழில் பிரியமுடன், யூத் என இரண்டு ஹிட் படங்களை விஜய்க்கு கொடுத்த இவர் முதன்முறையாக இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அடியெடுத்து வைக்கிறார். தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி இந்த படத்தை தயாரித்துள்ளார்.
சுரேஷ் கோபியின் மகனை அறிமுகப்படுத்த மலையாளத்திலேயே பல இயக்குனர்கள் தயாராக இருக்கும் நிலையில் தமிழிலிருந்து ஒரு இயக்குனரை அழைத்து வருவதற்கு காரணம் என்ன என சுரேஷ்கோபியிடம் கேட்கப்பட்டபோது, “நல்ல கதை.. ஏற்கனவே விஜய்யை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர்.. நல்ல தயாரிப்பு நிறுவனம்.. இது போதாதா என் மகனின் அறிமுகத்திற்கு ?” என்று நம்பிக்கையாக வின்சென்ட் செல்வாவிடம் மகனை ஒப்படைத்து விட்டாராம். அதுமட்டுமல்ல ஒருநாள் கூட மகனின் நடிப்பை பார்க்க படப்பிடிப்பு தளத்திற்கும் வந்தது இல்லையாம். வரும் ஜூலை மாதம் இந்த படம் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் வின்சென்ட் செல்வாவை கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!