
முதல் படம் வெளியான கையோடு விவாகரத்துக்கு விண்ணப்பித்த ராஜ்குமார் குடும்ப வாரிசு
தனது தந்தை மற்றும் சித்தப்பாக்களை போல யுவராஜ் குமாரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான யுவா என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படமும் ஓரளவுக்கு நல்ல வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தான் தனது மனைவி ஸ்ரீதேவி பைரப்பாவை விவாகரத்து செய்ய யுவராஜ் குமார் விண்ணப்பித்துள்ள தகவல் வெளியே வந்துள்ளது. யுவா திரைப்படம் வெளியான சமயத்திலேயே அதன் நிகழ்ச்சிகளில், கொண்டாட்டங்களில் எதிலுமே ஸ்ரீதேவி பைரப்பாவை பார்க்க முடியவில்லை. கடந்த ஒரு வருடமாகவே இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்த விவாகரத்து தகவல் அதை உறுதிப்படுத்தியுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!