
பிரதமருடன் பவன் கல்யாண் மகன் : பூரிப்பில் முன்னாள் மனைவி
இந்த நிலையில் டில்லி சென்ற பவன் கல்யாண் தன்னுடன் தனது இரண்டாவது மனைவி ரேணு தேசாயின் மகன் அகிரா நந்தனையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார். பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் பவன் கல்யாண்.
தானும் தந்தையும் பிரதமர் மோடியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது தாய்க்கு அனுப்பி வைத்த அகிரா நந்தன், பிரதமரை சந்தித்த அந்த கணம் குறித்து சிலாகித்து விவரித்துள்ளார். ஏற்கனவே பாஜகவில் இருக்கும் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் தனது மகன் பிரதமரின் அருகில் நிற்பதைக் கண்டு பூரிப்பில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அதே சமயம் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!