
சோலோ ரிலீஸிற்கு வழி செய்து கொடுங்கள் : ரவிதேஜா பட தயாரிப்பாளர் கோரிக்கை
அந்த சமயத்தில் தெலுங்கு பிலிம் சேம்பர் இதில் தலையிட்டு யாராவது ஒருவர் இந்த போட்டியில் இருந்து விலகிக் கொண்டால் அவர்களுக்கு பின்வரும் நாளில் சோலோவாக ரிலீஸ் ஆகும் விதமாக உதவி செய்கிறோம் என்று அறிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு ரவி தேஜாவின் ஈகிள் படம் இந்த போட்டியில் இருந்து பின்வாங்கியது. தற்போது பிப்ரவரி 9ஆம் தேதி ஈகிள் படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ளனர்.
ஆனால் அதே தேதியில் தான் ஜீவா, மம்முட்டி நடித்துள்ள யாத்ரா-2, சந்தீப் கிஷன் நடித்துள்ள ஊரு பேரு பைரவகோனா மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் லால் சலாம் படத்தின் தெலுங்கு வெர்ஷன் என மூன்று படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஈகிள் படத்தின் தயாரிப்பாளர், தெலுங்கு பிலிம் சேம்பர் தங்களுக்கு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி சோலோ ரிலீஸாக தங்கள் படம் வெளியாக வழிவகை செய்து கொடுக்க வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். தெலுங்கு பிலிம் சேம்பர் நிஜமாகவே கொடுத்த வாக்குறுதியா, இல்லை சங்கராந்தி ரிலீஸை சமாளிப்பதற்காக செய்த யுக்தியா என்பது ஈகிள் படம் ரிலீசின் போது தெரிந்து விடும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!