
அரசியல் உள்நோக்கம் கொண்ட படங்களில் நடிக்க மாட்டேன் : பிரித்விராஜ்
அதேபோல கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான ஜன கன மன மற்றும் குருதி என்கிற என்கிற அரசியல் கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்திருந்தார் பிரித்விராஜ். இதனை தொடர்ந்து இயக்குனர்கள் சிலர் அவரை தாங்கள் இயக்கும் அரசியல் சார்ந்த படங்களில் நடிக்க அழைத்தப்போது அந்த படங்களில் நடிக்க மறுத்து விட்டார் பிரித்விராஜ்.
இதுகுறித்து சமீபத்தில் பிரித்விராஜ் கூறும்போது, “அரசியல் கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதோ நடிப்பதோ எனக்கு ஒரு பிரச்சனை இல்லை. அதே சமயம் அரசியல் உள்நோக்கத்துடன் ஒரு தரப்பினரை குறிவைத்து தாக்கும் விதமாக எடுக்கப்படும் படங்களில் நடிக்க நான் ஒப்புக்கொள்வதில்லை. என்னுடைய லூசிபர் திரைப்படமும் ஜன கன மன திரைப்படமும் பொதுவான அரசியல் பிரச்சினைகளை மையப்படுத்தியே உருவாகியிருந்தது” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!