
மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018 பட இயக்குனர்
நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை மையப்படுத்தி கதையை உருவாக்கியதால் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை கவனித்த இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப், தான் அடுத்ததாக இயக்க உள்ள படத்திலும் இதே போன்று பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிஜ சம்பவம் ஒன்றை மையப்படுத்தி கதையை உருவாக்கி வருகிறாராம்.
கடந்த 1979ல் கேரள கப்பல் கழகத்திற்கு சொந்தமான எம்வி கைரளி என்கிற கப்பல் 20000 டன் எடை கொண்ட இரும்பை ஏற்றிக்கொண்டு 49 பணியாளர்களுடன் ஜெர்மனியை நோக்கி பயணித்தபோது எதிர்பாராத விதமாக கடலில் ஏற்பட்ட மோசமான சூழலால் திடீரென மாயமானது. இதை மையப்படுத்தி இதன் பின்னணியில் என்ன நடந்திருக்கும் என்பதை தனது பாணியில் திரைக்கதையாக மாற்றி எழுத்தாளர் ஜோஷி ஜோசப் என்பவருடன் இணைந்து உருவாக்கி வருகிறார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். 2018 படம் போல இந்த படமும் ரசிகர்களை உறைய வைக்கும் என உறுதியாக நம்பலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!