
தம்பியின் படம் பார்த்துவிட்டு சந்தோஷத்தில் அழுத விஜய் தேவரகொண்டா
அதற்கு முன்னதாக இந்த படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்ட போது நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து ரசித்தனர். படம் முடிந்து வெளியே வந்ததும் தம்பி ஆனந்த் தேவரகொண்டா மற்றும் படத்தின் நாயகி வைஷ்ணவி இருவரையும் தோளோடு தோள் சேர்த்து இறுக்கி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் விஜய் தேவரகொண்டா.
மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், படம் பார்த்துவிட்டு பல இடங்களில் தான் அழுததாகவும் கூறியுள்ளார். அதற்கு பிறகான சிரிப்பும் சந்தோஷமும் தான் இது என்று கூறியுள்ள விஜய் தேவரகொண்டா, தனது தம்பியும் படத்தின் நாயகி வைஷ்ணவியும் இந்த படத்திற்காக மிகப்பெரிய அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.. மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் என்றும் பாராட்டி உள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!