
காய்ச்சல் உடனேயே ப்ரோ டீசருக்கு டப்பிங் பேசிய பவன் கல்யாண்
படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை இந்த படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. இன்னும் பவன் கல்யாண் தனது டப்பிங் பணிகள் துவங்கப்படவில்லை அதே சமயம் இந்த டீசருக்காக என நேரம் ஒதுக்கி அதில் இடம்பெற்ற தனது காட்சிகளுக்கு மட்டும் டப்பிங் பேசியுள்ளார் பவன் கல்யாண். டப்பிங் பேசும் சமயத்தில் அவருக்கு அதிக அளவில் காய்ச்சல் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் டப்பிங் பேசியுள்ளார் பவன் கல்யாண். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனசேனா பார்ட்டி நடத்திய வாராஹி யாத்ராவில் அவர் கலந்து கொண்ட சமயத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!