
‛அவரைப்பற்றி பேசுவது டைம் வேஸ்ட்; நாகசைதன்யாவை கடுப்படித்த இயக்குனர்
இதற்கு முன்னதாக பிரபல தெலுங்கு இயக்குனர் பரசுராம், நாகசைதன்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்று நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வந்தது. குறிப்பாக பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்க்காரு வாரி பாட்டா என்கிற ஹிட் படத்திற்கு முன்னதாகவே இவர்கள் கூட்டணி இணைகிறது என்கிற செய்தி பேசப்பட்டு வந்தது. மகேஷ்பாபுவின் வெற்றி படத்திற்குப் பிறகு மீண்டும் நாகசைதன்யா படத்தை பரசுராமன் இயக்குவார் என்கிற செய்தி இன்னும் தீவிரமானது.
ஆனால் இயக்குனர் பரசுராமோ இன்னும் ஸ்கிரிப்ட் தயார் ஆகவில்லை என்பது போன்று சாக்குகளை சொல்லிக்கொண்டு நாகசைதன்யா படத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. நாகசைதன்யாவும் ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை செய்ய சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. இதனாலேயே அந்தப்படம் ட்ராப் ஆனதாக சொல்லப்படுகிறது. சமீபத்திய பேட்டியின்போது, பரசுராம் படத்தில் நடிப்பது என்னவாயிற்று என நாகசைதன்யாவிடம் கேட்கப்பட்டபோது உடனே மூடு மாறிய நாகசைதன்யா, “இயக்குனர் பரசுராம் பற்றி பேசுவது டைம் வேஸ்ட். அவர் எனது நேரத்தை நிறைய வேஸ்ட் செய்து விட்டார். இந்த டாபிக் பற்றி பேசுவதைக் கூட நான் விரும்பவில்லை” என்று வேண்டா வெறுப்பாக பதில் அளித்தார். அனேகமாக இனிவரும் காலத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!