
தெலுங்கு நடன இயக்குநர் சைதன்யா தற்கொலை
இந்த நிலையில் அவர் கிளப் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெரும் கடன் பிரச்சினையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன்பு அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் "எனது பெற்றோர், சகோதரி, சக டான்ஸ் மாஸ்டர்கள் மற்றும் நடனக் கலைஞர்களை மன்னிக்க வேண்டும். பணப்பிரச்சினையை சமாளிக்க முடியாமல் இப்படி ஒரு முடிவை எடுக்கிறேன். இதனை சமாளிக்க எவ்வளவோ முயன்றும் பலனில்லை" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். சைதன்யாவின் மரணத்திற்கு, தெலுங்கு திரையுலகை சேர்ந்த, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!