
சல்மான்கானுக்காக வெள்ளையை கருப்பாக்கிய ஜெகபதிபாபு
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் எனது கதாபாத்திர தோற்றம் இப்படித்தான் இருக்க வேண்டும் என எதுவும் தீர்மானிக்கப்பட்டு இருக்க வில்லை. அதேசமயம் சல்மான்கானும் நானும் இந்த படத்தில் மோதும் காட்சிகள் இருக்கின்றன. இதனால் சல்மான்கான் என்னிடம் வந்து என்னுடைய தலைமுடிக்கு டை அடித்து கருப்பாக மாற்றினால் நன்றாக இருக்கும் என கூறினார்.
அதற்கு காரணமாக அவர் சொல்லும்போது, நான் சண்டையிடும்போது எதிராளி என்னை விட வயதானவராக காட்சியளித்தார் என்றால் அது பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. அதனால் உங்களை இன்னும் கொஞ்சம் இளமை தோற்றத்துடன் காட்டினால் அதில் நம்பகத்தன்மை இருக்கும் என்று கூறினார். இதில் எங்கேயும் அவர் என்னை வற்புறுத்தும் விதமாக, கட்டளை தொனியை வெளிப்படுத்தவே இல்லை. இதை ஒரு வேண்டுகோளாகவே அவர் என்னிடம் வைத்தார். அதனாலேயே நானும் ஒப்புக் கொண்டு நடித்தேன்” என்று கூறியுள்ளார் ஜெகபதிபாபு.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!