
ஜெயசூர்யாவை குஞ்சாக்கோ போபனாக மாற்றி அதிர வைத்த கார்த்தி
அப்படி சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கேரளாவில் கொச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மலையாள நடிகர்களான ஜெயசூர்யா, டொவினோ தாமஸ், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்படி அந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ஜெயசூர்யாவை பாராட்டிய நடிகர் கார்த்தி, அவரை நடிகர் குஞ்சாக்கோ போபன் என நினைத்துக்கொண்டு மலையாள திரையுலகினர் அவரை செல்லமாக அழைக்கும் சாக்கோச்சா என்கிற பெயரை சொல்லி அழைத்து இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்ததற்கு ரொம்ப நன்றி என்று கூறினார்.
இதை அருகில் நின்று பார்த்த நடிகர் ஜெயராம் உள்ளிட்ட பலரும் சற்று குழம்பித்தான் போனார்கள். நடிகர் ஜெயசூர்யாவுக்கு கூட அந்த குழப்பம் ஏற்பட்டதை அவர் முகத்தில் பார்க்க முடிந்தது. இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சியில் குஞ்சாக்கோ போபன் கலந்து கொள்ளவும் இல்லை. ஜெயசூர்யாவைத்தான் கார்த்தி தவறுதலாக குஞ்சாக்கோ என குறிப்பிட்டதையும் அதை மேடையிலேயே கார்த்தியிடம் சொல்லி திருத்த முடியாமல் ஜெயராம் மற்றும் தொகுப்பாளினி இருவரும் சங்கடப்பட்டதையும் பார்க்க முடிந்தது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!