
மஞ்சு வாரியர் ஓட்டுநர் உரிமம் பெற்றதை புரமோசனுக்கு பயன்படுத்திய படக்குழு
மலையாளத்தில் தற்போது வெள்ளரிப்பட்டணம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு கிராம பஞ்சாயத்தின் வார்டு மெம்பராக கே.பி.சுனந்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மஞ்சு. படத்தில் அவர் இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற ரொம்பவே போராடுவதாகவும் அதைப்பெற்று தருவதற்காக அவர் தனது குருவுக்கு அவ்வப்போது 500 ரூபாய் தண்டம் அழுவதாகவும் காமெடியாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இதனை குறிப்பிட்டு கே.பி சுனந்தா கதாபாத்திரம் மஞ்சுவாரியருக்கு, “நீங்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. நான்தான் இங்கே ஓட்டுனர் உரிமம் பெற போராடிக்கொண்டு இருக்கிறேன். விரைவில் நானும் ஓட்டுனர் உரிமம் பெற்று விடுவேன். முடிந்தால் ஒரு முறை எங்களது கிராமத்து பக்கம் வந்து செல்லவும். உங்களை பார்க்க அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள். தற்போது நான் ஒரு வேலையாக இருப்பதால் உங்களுடன் பிறகு பேசுகிறேன்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நிஜத்தில் மஞ்சுவாரியருக்கு இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் எடுக்க வேண்டிய தேவை, அவர் நடித்து வரும் படத்திலும் இருப்பதால் இதை அழகாக படத்தின் பிரமோஷனுக்கு பயன்படுத்தி கொண்டுள்ளார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!