
சென்சார் அனுமதித்த காட்சிகளுக்கு வழக்கு போடுவதா? கொந்தளிக்கும் அடார் லவ் இயக்குனர்
இதுபற்றி அவர் கூறும்போது, “ஏதோ நான் மட்டுமே இப்போது புதிதாக இந்த போதைப்பொருளை எனது படத்தில் காட்டுகிறேன் என்பதுபோல வேண்டுமென்றே சித்தரிக்கிறார்கள். இதற்கு முன்னதாக மம்முட்டியின் பீஷ்ம பருவம், மோகன்லாலின் லூசிபர் ஆகிய படங்களில் இதே பொருளும் அதன் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தவிர தற்போது நாட்டில் நிகழும் இந்த போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் குறித்து பேப்பரில் வரும் ஆதாரத்தை வைத்து கதையின் தேவைக்காக படத்தில் காட்சியாக பயன்படுத்தியுள்ளேனே தவிர, இந்த போதைப் பொருளை புரமோட் செய்யும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை.
மேலும் படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் இந்தக் காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்து 18வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் ஏ சான்றிதழும் அளித்துள்ளனர். அப்படி சென்சார் அதிகாரிகள் அனுமதித்த நிலையில் வேண்டுமென்றே இப்போது வழக்குப் பதியப்பட்டுள்ளதில் உள்நோக்கம் இருக்கிறது. இதை முறையாக நான் எதிர் கொள்வேன்” என்று கூறியுள்ளார் ஒமர் லுலு.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!