
‛லெஜன்ட் நாயகியின் தலையில் ஐஸ்கட்டியை இறக்கிய சிரஞ்சீவி
இந்த நிலையில் வால்டர் வீரைய்யா புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது புகழ்ச்சி வார்த்தைகளால் ஊர்வசி ரவுட்டேலாவை ஐசகட்டி மழையில் நனைய வைத்துவிட்டார் சிரஞ்சீவி. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, இந்த படத்தில் ஊர்வசி பாஸ் பார்ட்டி பாடலில் அருமையான பங்களிப்பை கொடுத்துள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றியது அற்புதமாக இருந்தது. முதலில் அந்த பாடலுக்கு யார் ஆடுகிறார்கள் என எனக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் ஊர்வசி தான் ஆடப் போகிறார் என்று தெரிந்ததுமே நான் மகிழ்ச்சி அடைந்தேன்” என்று கூறினார் சிரஞ்சீவி.
இப்படி சிரஞ்சீவியே தன்னைப்பற்றி புகழ்ந்து பேசினார் என்றதுமே அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அருகிலிருந்த ஊர்வசி ரவுட்டேலா அவருக்கு கை கொடுத்து நன்றியை தெரிவித்தார். உடனே தன் மீது மின்சாரம் பாய்ந்தது போன்று ஜெர்க் ஆனது போல பாவனை செய்த சிரஞ்சீவி, “என்னுடைய கை அப்படியே ஸ்தம்பித்துப் போனது.. காரணம் என் கைகளில் அல்ல, இதயத்தில் இருக்கும் காந்தத்தால்” என்று இன்னும் புகழ ஆரம்பித்ததும் ரொம்பவே வெட்கப்பட்டார் ஊர்வசி ரவுட்டேலா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!