
ஜெர்சி இயக்குனரின் படத்தை கைவிட்ட ராம்சரண் : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
இந்த நிலையில் இந்த படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து தயாரிப்பு நிறுவனம் எதுவும் குறிப்பிடவில்லை. அதேசமயம் ராம்சரணின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அதே நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கூட இந்த படம் கைவிடப்பட போவதாக செய்திகள் வந்தபோது அப்போது அதை உறுதியாக மறுத்த ராம்சரண், “நான் கவுதமுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன். அவர் போன்ற ஒரு திறமையான இயக்குனருடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக இருக்கிறேன்.. மற்றவர்கள் சொல்வதுபோல இது ஸ்போர்ட்ஸ் படம் அல்ல.. ஆக்சன் படம்” என விளக்கம் சொல்லி அப்போது எழுந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தற்போது எந்த காரணமும் சொல்லப்படாமல் இந்தப்படம் கைவிடப்பட்டுள்ளது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!