
காரைக்குடியில் பூஜையுடன் துவங்கியது டொவினோ - கிர்த்தி ஷெட்டி படப்பிடிப்பு
இந்தப்படத்தின் பூஜை காரைக்குடியில் உள்ள ஒரு கோவில் மண்டபத்தில் எளிமையாக நடைபெற்றதுடன் அப்படியே படப்பிடிப்பும துவங்கியுள்ளது. இந்தப்படத்தின் கதை 1900, 1950 மற்றும் 1990 என மூன்று விதமான காலகட்டங்களில் நிகழ்வதால் மூன்று விதமான தோற்றங்களில் நடிகர் டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார். அதற்கு ஏற்ற மாதிரி கிர்த்தி ஷெட்டி தவிர ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மலையாளத்தில் தேசியவிருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நடிகை ரோகிணி, ஹரிஷ் பெராடி ஆகியோரும் நடிக்கின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!