
தீபாவளிக்கு திரைக்கு வரும் மான்ஸ்டர்
அதனால் மான்ஸ்டர் படத்தையும் ஓடிடியில் வெளியிடலாம் என்கிற பேச்சு ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் மான்ஸ்டர் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாலும், ஓடிடியில் வெளியிட விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்ததாலும் இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்தனர். அதன்படி செப்டம்பர் 30ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் அந்த சமயத்தில்தான் பொன்னியின் செல்வன், நானே வருவேன் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. இதனால் தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி தீபாவளி அன்று மான்ஸ்டர் படத்தை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். இதற்காக தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாக மலையாள திரையுலக விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது..



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!