
பத்திரிக்கையாளர் சந்திப்பில் டேபிளில் கால்களை தூக்கி வைத்த விஜய் தேவரகொண்டா
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்தேவரகொண்டா பத்திரிக்கையாளர்கள் முன்பாக டேபிளில் கால்களை தூக்கி வைத்து நாற்காலியில் குத்தவைத்து அமர்ந்தபடி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நிருபர் ஒருவர் விஜய் தேவரகொண்டாவிடம் பேசும்போது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த டாக்ஸிவாலா படம் ரிலீஸ் ஆன சமயத்தில் விஜய் தேவரகொண்டாவிடம் தன்னால் எப்படி சவுகரியமாக பேச முடியவில்லை என்பது பற்றி கூறினார். அதற்கு நகைச்சுவையாக பதில் அளிப்பதாக நினைத்துக்கொண்ட விஜய் தேவரகொண்டா, “ஏன் இப்படி சவுகரியமாக உட்கார்ந்து கொண்டு இப்போது பேசலாமே” என்று கூறியபடி தனது கால்களை அங்கிருந்த டீப்பாய் மீது தூக்கி வைத்துக்கொண்டு பதில் அளித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவின் இந்த செயல் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும் நெட்டிசன்களிடம் மிகப்பெரிய விமர்சனங்களையும் பெற்று வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!