
வலையில் சிக்கவைக்க முயற்சி ; உச்ச நீதிமன்றத்தில் திலீப் திடீர் மனு
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற கேரள டிஜிபி ஸ்ரீகலா என்பவர் திலீப் ஓர் அப்பாவி என்றும், அவரை விட அதிக சக்தி வாய்ந்தவர்கள் அவரை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் திலீப்.
அதில், தனது முன்னாள் மனைவி, பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் டிஜிபி ரேங்க்கில் உள்ள ஒரு அதிகாரி ஆகிய மூவர் மீதும் குற்றம் சாட்டியுள்ள திலீப், இவர்கள் தன்னை களங்கப்படுத்தும் விதமாக தன்னை ஒரு வலையில் சிக்கவைக்க முயற்சி செய்து வருகின்றனர் என்றும் அதனாலேயே கிழமை நீதிமன்றத்தில் வழக்கை இழுத்தடித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் திலீப். இந்த வழக்கை குறிப்பிட்ட காலக்கெடு விதித்து அதற்குள் முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்பதாக உச்ச நீதிமன்றத்திற்கு அத மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!