
பஹத் பாசிலின் மலையான் குஞ்சுவை புகழ்ந்த மாரி செல்வராஜ்
இந்தநிலையில் சமீபத்தில் பஹத் பாசில் மலையாளத்தில் நடித்த மலையான் குஞ்சு என்கிற திரைப்படம் வெளியானது. கேரளாவில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டு இன்னலுக்கு ஆளாகும் மக்களின் துயரத்தை சொல்லும் விதமாக நிஜ சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் பஹத் பாசிலின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் மாரி செல்வராஜ், “இந்த படம் ரொம்பவே சென்சிடிவான கதையை கொண்டது. இந்த படத்தில் பஹத் பாசிலின் அற்புதமான நடிப்பு, ஏ.ஆர் ரகுமானின் மனதை வேட்டையாடும் இசை, அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை ரொம்பவே தத்ரூபமாக படமாக்கிய படக்குழுவின் முயற்சி என தியேட்டரில் படம் பார்க்கும்போது அற்புதமான உணர்வை கொடுத்தது.. படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று அனைவரையும் பாராட்டி உள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!