
பரிசோதனை முயற்சியாக உருவாகும் பிரித்விராஜின் தீர்ப்பு
இந்தப்படத்தில் பரிசோதனை முயற்சியாக அலெகோரி என்கிற புதிய பாணியில் கதையை எழுதியுள்ளார் கதாசிரியரும் நடிகருமான முரளி கோபி. அதாவது, படத்தில் மேம்போக்காக ஒரு கதை சொல்லப்பட்டாலும் அதில் இன்னொரு கதையும் மறைமுகமாக சொல்லப்பட்டு கொண்டே வரும். இந்த இரண்டுக்குமே சம்பந்தம் இல்லாதது போல் தெரிந்தாலும் மறைமுகமாக சொல்லப்படும் கதையை மேம்போக்காக சொல்லப்படும் கதை, படம் முழுவதும் பிரதிபலிக்கும் என்கிறார் முரளி கோபி. ஹாலிவுட் படங்களில் இதுபோன்று ஜானரில் சில படங்கள் வெளியாகியுள்ளன மலையாளத்தில் இதுதான் முதல் முறை என்று கூறியுள்ளார்.
பிரித்விராஜ், முதன்முறையாக இயக்குனராக மாறி, மோகன்லாலை வைத்து இயக்கிய "லூசிபர்" என்கிற சூப்பர் ஹிட் படத்தின் கதையை எழுதியவர் தான் இந்த முரளி கோபி. அதுமட்டுமல்ல கம்மார சம்பவம் படத்திற்கும் கதை எழுதியதும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!