
ரவிதேஜாவிடம் பாலகிருஷ்ணா கேட்ட இரண்டு வில்லங்க கேள்விகள்
இந்தநிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரவிதேஜா கலந்துகொண்டுள்ளார். இதுபற்றிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு ரவி தேஜாவும் ஆளானார். அதுபற்றி இந்த நிகழ்ச்சியில் நேரடியாகவே ரவிதேஜாவிடம் கேட்டுள்ளார் பாலகிருஷ்ணா.
அதுமட்டுமல்ல, சில வருடங்களுக்கு முன் ஒருமுறை ராவிதேஜாவை பாலகிருஷ்ணா அறைந்தார் என்று மீடியாக்களில் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என ரவிதேஜாவிடம் இந்த நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா கேட்க அதற்கும் பதில் சொல்கிறார் ரவிதேஜா.. இந்தநிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது இந்த இரண்டு கேள்விகளுக்கும் நமக்கு விடை தெரிந்துவிடும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!