
மீண்டும் ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்கு தயாராகும் பிரித்விராஜ்
குறிப்பாக கடந்த வருடம் மார்ச் மாதம் ஜோர்டன் நாட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது தான், கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படக்குழுவினர் அங்கேயே மூன்று மாதம் தங்க வேண்டிய ஒரு சூழல் உருவானது. அதன்பிறகு கேரளா திரும்பிய பிரித்விராஜ், வேறு சில படங்களில் நடித்ததுடன், மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.
தற்போது ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் கடுவா என்கிற படத்தில் நடித்துவரும் பிரித்விராஜ் விரைவில் அதை முடித்துவிட்டு, மீண்டும் ஆடுஜீவிதம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவுக்கு பயணப்பட இருக்கிறார். இதற்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ள பிரித்விராஜ், இந்த தகவலை அவரே தெரிவித்தும் உள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!