
பிரித்விராஜுக்கு விவேக் ஓபராய் எச்சரிக்கை
இந்த நிலையில் மீண்டும் மலையாள திரையுலகில் வில்லனாகவே ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் விவேக் ஓபராய். ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் தற்போது பிரித்விராஜ் ஹீரோவாக நடித்து வரும் கடுவா என்கிற படத்தில் வில்லனாக நடிக்கிறார் விவேக் ஓபராய். இந்த படத்தில் காட்டு ராஜாவாக கடுவா என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்க அவரைப் பிடிப்பதற்காக நியமிக்கப்படும் காட்டிலாகா அதிகாரியாக விவேக் ஓபராய் நடிக்கிறார் இதை குறிப்பிடும் விதமாக "வேட்டைக்காரன் வந்துவிட்டான்.. எச்சரிக்கையாக இரு கடுவா.. இன்று முதல் ஆக்சன் ஆரம்பம்" என்று குறிப்பிட்டு படப்பிடிப்பில் தான் கலந்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் விவேக் ஓபராய்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!