
இளம் நடிகர் மீதான தடையை நீக்கிய தயாரிப்பாளர் சங்கம்
ஆனால் சில நாட்களில் சம்பந்தப்பட்ட அந்த தொகுப்பாளினி அந்த நடிகரின் திரையுலக வாழ்க்கை தன்னால் பாதிக்கப்பட வேண்டாம் என்று கருதியதாலும் ஸ்ரீநாத் பாஷி அந்த பெண் தொகுப்பாளினியிடம் தனது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டதாலும் அவர் மீது கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார். இருந்தாலும் அவர் மீதான தடை தற்போதுவரை நீடித்து வந்தது.
இந்த நிலையில் அவர் நடித்துள்ள படம் "படச்சோனே இங்களு காத்தொலு" என்கிற படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்ரீநாத் பாஷிக்கு புதிய பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்துள்ளன. அதேசமயம் அவர் மீது நீடிக்கும் தடையால் அந்த வாய்ப்புகளை அவர் ஒப்புக் கொள்ள முடியாத சூழல் இருந்தது. இதைத்தொடர்ந்து அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் மீதான தற்காலிக தடையை மலையாள தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!