
பாலாவை பார்க்க மகள் விரும்பவில்லை : முன்னாள் மனைவி அதிரடி
இந்த சூழ்நிலையில் நடிகர் பாலா, கடந்த வருடம் எலிசபெத் என்கிற மருத்துவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கூட சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பரபரப்பான செய்திகள் வெளியாகி பின்னர் அது மறந்து, இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளனர். சமீபத்தில் தான் நடித்த சபீக்கிண்டே சந்தோசம் என்கிற படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்க்க இருவரும் ஒன்றாக வந்திருந்தனர். இந்த சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாலா, தனது மகளும் தன்னுடன் படம் பார்க்க வருவார் என்று விரும்பியதாகவும் ஆனால் அது நிறைவேறவில்லை என்றும் கூறினார்.
நடிகர் பாலா மறு திருமணம் செய்துகொண்டது போல, அவரது முன்னாள் மனைவி அம்ரிதாவும் பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தருடன் லிவிங் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். தங்கள் இருவரின் நெருக்கமான புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் இருவருமே வெளியிட்டு வருகின்றனர். அம்ரிதாவின் பத்து வயதான மகள் பாப்புவும் கோபி சுந்தர் மீது மிகுந்த பாசத்துடன் இருப்பது குறித்த புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகின.
அதுமட்டுமல்ல தற்போது பாலா தனது மகள் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்திய சமயத்தில் அவருக்கு ஆதரவாக பலரும் அம்ரிதாவுக்கு எதிராக குரல் எழுப்பினர். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அம்ரிதா வெளியிட்ட பதிவில், தனது மகள் அவளது தந்தையை பார்க்க விரும்பவில்லை என்றும், அவர் தொலைபேசியில் அழைத்தபோது நான் வரவில்லை என்று அவளே கூறி விட்டதாகவும் தற்போது இருக்கும் புதிய சூழலில் அவள் ரொம்பவே சந்தோஷமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!