
மகள் வெற்றியால் ஆனந்த கண்ணீர் சிந்தும் தேவிகா சஞ்சய்
இந்த படத்தில் அம்மா மகளின் உறவு மிக அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மகளாக நடித்துள்ள தேவிகா சஞ்சய் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார். இது தொடர்பாக அவர் மீடியாக்களிடம் பேசும்போது ஆனந்த கண்ணீர் வடித்தார். அந்த வீடியோவும், படமும் வைரலாகி வருகிறது.
அவர் கூறியிருப்பதாவது: எனது இதயம் நிறைந்துள்ளது. படப்பிடிப்பின் கடைசி நாளில் நான் அழுதேன், இன்றுவரை அழுது கொண்டிருக்கிறேன். எனது கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனது முதல் படமே வெற்றிப் படமாகவும், எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்த படமாகவும் அமைந்தது இறைவன் கொடுத்து வரம்.
சத்யன் சார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், சீனிவாசன் சார், சித்திக் சார் உங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி, உங்களோடு திரையை பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி . என்று கூறியுள்ளார் தேவிகா.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!