
இந்தியன் 2 பற்றிய அதிர்ச்சித் தகவல் உண்மையா ?
லைக்கா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட நீதிமன்றம் வரை சென்றார்கள். பின்னர் தயாரிப்பாளர் சுபாஷ்கரனை சில வாரங்களுக்கு முன்பு ஷங்கர் சந்தித்துப் பேசி பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்கள் என தகவல் வெளியானது.
அதற்குள் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். "இந்தியன் 2" படத்தையும் மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று அவர் சொன்னதை பாலோ செய்யவில்லை எனத் தெரிகிறது.
எஞ்சியுள்ள காட்சிகளைப் படமாக்க ஷங்கர் தரப்பில் ஒரு பட்ஜெட்டைச் சொன்னார்களாம். அந்த பட்ஜெட், எவ்வளவு நாட்களில் படமாக்கம் என ஒரு அக்ரிமென்டில் எழுதி கையெழுத்துப் போட வேண்டும் என லைக்கா தரப்பில் ஷங்கரிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு ஷங்கர் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இந்தக் காரணத்தால் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவில்லை.
இப்போதுள்ள சூழ்நிலையில் "இந்தியன் 2" படப்பிடிப்பு மீண்டும் நடக்குமா என்பது சந்தேகமே என்கிறது கோலிவுட் தரப்பு. ஷங்கர் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை என்றால் லைக்கா தரப்பில் படத்தை "டிராப்" செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!