
ஷங்கர் - ராம்சரண் படத்தில் பிரம்மாண்ட சண்டைக்காட்சி
செப் 22, 2021
Advertisement
ஷங்கர் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதக் கடைசியில் இருந்து ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இதனிடையே, இப்படம் பற்றிய சில தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் 10 கோடி ரூபாய் செலவில் ஒரு ரயில் சண்டைக் காட்சியை பிரம்மாண்டமாய் படமாக்க உள்ளார்களாம். அதில் மட்டும் 100 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாகவும், அவர்களுடன் ராம்சரண் சண்டையிடுவது போலவும் படத்தில் காட்சி வைத்துள்ளார்களாம். இதுவரை இப்படி ஒரு சண்டைக்காட்சி வரவில்லை என்று சொல்லுமளவிற்கு அந்தக் காட்சியைப் படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.
படம் ஆரம்பித்து வெளிவருவதற்குள் இப்படியான பல பில்ட்-அப்கள் தொடர்ந்து வரும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் 10 கோடி ரூபாய் செலவில் ஒரு ரயில் சண்டைக் காட்சியை பிரம்மாண்டமாய் படமாக்க உள்ளார்களாம். அதில் மட்டும் 100 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாகவும், அவர்களுடன் ராம்சரண் சண்டையிடுவது போலவும் படத்தில் காட்சி வைத்துள்ளார்களாம். இதுவரை இப்படி ஒரு சண்டைக்காட்சி வரவில்லை என்று சொல்லுமளவிற்கு அந்தக் காட்சியைப் படமாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.
படம் ஆரம்பித்து வெளிவருவதற்குள் இப்படியான பல பில்ட்-அப்கள் தொடர்ந்து வரும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!