
சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு
கொரோனா சமயத்தில் வெளிமாநிலங்களில் தவித்த பல தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு ரயில், பஸ், விமானம் என அனுப்பி வைத்தவர் தொடர்ந்து இப்போது வரை பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். இதனாலேயே இப்போதும் சோனு சூட்டிடம் உதவிக் கேட்டு பலர் அவரது வீட்டு வாசலை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையில் சோனு சூட்டிற்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சோனு சூட்டிற்கு சொந்தமான நிறுவனம் மற்றும் லக்னோவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் இடையேயான வர்த்தகம் தொடர்பான விஷயத்தில் வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் இந்த வருவமான வரிசோதனை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!