
தமிழ் நடிகை என்பதாலேயே கிடைத்த வாய்ப்பு - ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன் பேட்டி: மிகவும் யதார்த்தமான படம். மேக்கப்பே இல்லாமல் நடித்துள்ளேன். என்னை அழகாக காட்டியுள்ளனர். தமிழ் பேசும் நடிகை என்பதாலேயே எனக்கு இந்த வாய்ப்பை இயக்குனர் வழங்கினார். தமிழ் நடிகை என்பதாலேயே வாய்ப்பு கிடைப்பதில்லையா என்பது தெரியவில்லை. ஒன்றிரண்டு படத்தில் நடித்தாலும் மக்கள் மனதில் பதியும்படி நடிக்க வேண்டும். இப்படத்தில் எனக்கு ஜோடியாக புதுமுகம் மிதுன் நடிக்கிறார். இதில் முத்தக்காட்சியும் உண்டு. ஆனால், நான் வளர்த்த மாடுகளுடன் மட்டுமே. இப்படத்திற்காக மாடுகளுடன் பழகவும் வேண்டிஇருந்தது. படப்பிடிப்பு நடந்த இடம் கடினமாக இருந்தாலும், மொத்த படக்குழுவுடன் பயணித்த அனுபவம் இனிமையானது.
இவ்வாறு அவர் கூறினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!