
மீண்டும் வில்லன் சர்ச்சையில் சிக்கிய மாதவன்
இப்படத்திற்காக லிங்குசாமி வில்லன் நடிகர் தேடி வந்தபோது மாதவனிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படியொரு விசயமே நடக்கவில்லை என்று மாதவனே மறுத்தார். பின்னர் தனது புதிய படத்தில் ஆதி வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியிட்டார் லிங்குசாமி.
இந்நிலையில் தற்போது லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் படத்தை சிரஞ்சீவியை வைத்து இயக்கி வரும் மோகன் ராஜாவும் அந்த படத்தில் முதலில் மலையாள நடிகர் பிஜூமேனனை வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார். ஆனால் இப்போது ஒரு மெகா நடிகர் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று மாதவனை காட்பாதரில் வில்லனாக நடிக்க வைக்க மோகன் ராஜா அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது சீக்கிரமே தெரிந்து விடும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!