பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றம் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை நடிகர் ஜெயம் ரவி முடித்து கொடுத்துள்ளார். இதில் இவர் அருள்மொழி வர்மனாக நடித்துள்ளார். டுவிட்டரில் ஜெயம்ரவி கூறுகையில், ‛என்னை நம்பியதற்கு நன்றி. இனி பொன்னியின் செல்வன் செட்டில் இருப்பதை இழப்பேன். உங்களுடன் மீண்டும் வேலை செய்யும் நாளை எதிர்நோக்குகிறேன். புதிய தொடக்கத்திற்காக கனமான இதயத்துடன் செல்கிறேன் எனக்கூறியுள்ளார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!