
கோவாவில் பார்ம் ஹவுஸ் வாங்கிய சமந்தா, நாகசைதன்யா
தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக, அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். தன்னுடன் முதல் படத்தில் கதாநாயகனாக நடித்த நாக சைதன்யாவைக் காதலித்து அவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்தியாவில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமும், கடற்கரை நகரமுமான கோவாவில் பெரிய ரிசார்ட்டில் "டெஸ்டினேஷன் வெட்டிங்" ஆக நடந்தது. அதன் பின் அளித்த பேட்டியில் கோவாவில் வசிக்க வேண்டும் என்பது தனது ஆசை என சமந்தா கூறியிருந்தார்.
அதற்காக கோவாவில் ஒரு இடத்தை வாங்க வேண்டுமென அவரும், கணவர் நாக சைதன்யாவும் முயற்சித்தார்கள். தற்போது அங்கு கடற்கரையை ஒட்டி ஒரு இடத்தை வாங்கிவிட்டார்களாம். அங்கு பார்ம் ஹவுஸ் கட்டுவதற்கான வேலைகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகத் தகவல்.
தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் சமந்தா, கோவாவிற்கு தன் இருப்பிடத்தை மாற்றலாம் என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!