
வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர் : சூர்யாவின் மனு தள்ளுபடி
இப்படியான நிலையில் தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால் வருமான வரி சட்டப்படி மாதம் ஒரு சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார் சூர்யா.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சோதனை நடந்து 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் நடிகர் சூர்யா தாமதமாகத்தான் தாக்கல் செய்துள்ளார். வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. சோதனைக்குப் பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை. அதனால் வருமான வரி சட்டப்படி வரி விலக்கு பெற சூர்யாவுக்கு உரிமை இல்லை என்று நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு ஏற்கனவே நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!