
ஹாலிவுட் பாணியில் உருவாகும் கொற்றவை
படம் பற்றி சி.வி.குமார் கூறியதாவது: டைட்டிலை பார்த்து விட்டு பலரும் இதனை பக்தி படம் என்று நினைக்கிறார்கள். இது பக்தி படம் அல்ல. தமிழர்களின் குல தெய்வ வழிபாடான கொற்றவையை சுற்றி நடக்கிற ஒரு புதையல் தேடும் கதை. ஹாலிவுட்டில் வெளிவந்த இண்டியானா ஜோன்ஸ். டிரஸ்சர் ஹண்டர் பாணியில் உருவாகும் படம்.
ஒரு புதையலை தேடி ஒரு குழுவினர் செல்கிறார்கள். அவர்களுக்கும், அந்த புதையலுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இந்த ஒன் லைனை வைத்துக் கொண்டு முழுக்க முழுக்க பொழுது போக்கு படமாக உருவாகிறது. படம் 3 பாகமாக வெளிவர இருக்கிறது. முதல் பாகம் வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு 3வது பாகத்தின் படப்பிடிப்புகள் நடக்கிறது. படத்தில் அதிகமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. இதற்கான பணிகள் தனியாக நடந்து வருகிறது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!